2. மந்திர வாதி என்பார்-சொன்ன மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்; யந்திர சூனியங் கள்-இன்னும் எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்! தந்த பொருளைக் கொண்டே-ஜனம் தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்; அந்த அரசிய லை-இவர் அஞ்சதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர் வார் (நெஞ்சு)
3. சிப்பாயைக் கண்டு அஞ்சு வார்-ஊர்ச் சேவகன் வருதல்கண்டு மனம்பதைப் பார்; துப்பாக்கி கொண்டு ஒருவன்-வெகு தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப் பார்; அப்பால் எவனோ செல்வான்-அவன் ஆடையைக் கண்டுபயந் தெழுந்துநிற் பார்; எப்போதும் கைகட்டு வார்-இவர் யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப் பார் (நெஞ்சு)